அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 20-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ பாடல்கள் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினமே ட்ரெய்லரும் வெளியாகும் என தெரிகிறது.
இப் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள.இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.