நடிகை சரண்யாவை கேலி கிண்டல் செய்த நெட்டிசன்களை இணையத்தில் வறுத்தெடுத்த அவரது கணவர்…

saranya21
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சரண்யா மோகனின் குண்டான புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதை பார்த்த நெட்டிசன்கள் ‘எப்படி இருந்த சரண்யா’ இப்படி ஆயிட்டிங்க ‘ என்ற பாணியில் கலாய்த்து தள்ளினர். இதனால் பொங்கி எழுந்த சரண்யா நேற்று தனது பேஸ்புக்கில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று அவருடைய கணவர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சரண்யாவின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது சரண்யா வெயிட் போட்டது முக்கியமான பிரச்சனை இல்லை.

மேலும் என் மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு வெயிட் போட்டதை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை’’ என்று அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Response