இடி தாக்கியதில் பெண் ஒருவர் பலி…

pen
மழை எப்பொழுது வராதா நம் வீட்டினர் தாகத்தை தணிக்காத என்று காத்துகொண்டு இருந்த மக்களின் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருவள்ளுரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அப்பகுதியில் ஒரு பெண் மரணத்துக்கு உள்ளாகினார்.

அதாவது என்ன நடந்தது என்றால் வெயில் தாக்கம் குறையாது நிலையில் திடீரென பள்ளிப்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வானம் இருண்டு, இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது.

இம்மழையில் ஆர்.கே.பேட்டை அருகே சி.ஜி.எஸ்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி திருவாமணி (37) பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது இடி விழுந்ததில் திருவாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒருபக்கம் மழை பெய்து நிலத்தையும், மக்கள் மனத்தையும் குளிர்வித்ததையும் எண்ணி சந்தோசப்படும் தருவாயில். இடி விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response