பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி


czdrdaoxuaanfuuபாலிவுட் நடிகர் திலீப் குமார் மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா ஆகிய பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படம் தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படமாகும். இப்படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.

திலீப்குமார் பாலிவுட் முன்னாள் கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக 1998-ம் ஆண்டில் வெளியான ‘கிலா’ படத்தில் நடித்திருந்தார். 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

சாய்ரா பானு  திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்பட எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சினிமாத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாபா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டிலும், மத்திய அரசின் மிகஉயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதினை கடந்த 2015-ம் ஆண்டும் திலீப் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Leave a Response