நாம் அவ்வப்போது செய்திகளில் தெரிந்துகொள்ளும் விஷயம் போலி பத்திரம், கள்ள நோட்டு, டூப்ளிகேட் மதுபானம் போன்றவை. போலி கல்வி சான்றிதழ்கள் சில காலங்களாக நம் நாட்டை உலுக்கி வருகிறது.
இந்த போலி கல்வி சான்றிதழ்கள் சாதாரணமான ஒருவரால் அச்சிடப்படுவதில்லை. இது ஒரு பெரிய நெட்வெர்க்கை கொண்டு நடத்தப்படும் பெரிய அளவு கள்ள தொழில். சமுக குற்றவாளிகள் எவ்வாறு மற்றவர்களுடைய விவரங்களை சேகரித்து, அந்த விவரங்களை கொண்டு இன்னொருவருக்கு போலி சான்றிதழை தயாரித்து தருகிறார்கள் என்பதை தத்ரூபமாக சொல்லும் படம் தான் “கணிதன்”.
இந்த படத்தில் அதர்வ மற்றும் கெதெரின் தெரேசா இனைந்து நடிக்க, டிரம்ஸ் சிவமணி இசையமைத்து, T.N.சந்தோஷ் இயக்கி, கலைப்புலி S.தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 26 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.