“பாலச்சந்தருக்கு சிலை வைக்கவேண்டும்” – இயக்குனர் சங்கம் கோரிக்கை..!

இந்திய திரையுலகில் அதிகம் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வர்களை பிரபலமாக்கிய பெருமை மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு மட்டுமே உண்டு. அவரது வாழ்க்கை வரலாறு தலைமுறைகள் தாண்டி ஒரு சரித்திரமாக அறியப்படவேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை.

அதனால் கே.பாலச்சந்தரை அடுத்து வரும் தலைமுறைகள் காலாகாலத்திற்கும் நினைவுகூரும் விதமாக அவருக்கு சிலைவைக்க வேண்டும் எனவும் மயிலாப்பூரில் உள்ள தெரு ஒன்றிற்கு அவரது பெயரையும் வைக்க வேண்டும் எனவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் முடிவுசெய்து அதை தமிழக அரசுக்கு கோரிக்கையாகவும் வைத்துள்ளது.

அதுமட்டுமல்ல இயக்குனர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்து, சமூகப்பிரச்சனைகளை தைரியமாக அவரவர் பாணியில் படமாக்கலாம் என ஊக்கம் கொடுத்த பாலச்சந்தரை மேலும் கௌரவிக்கும் வகையில் இயக்குனர்கள் சங்க கட்டிடத்திற்கு ‘பாலச்சந்தர் இல்லம்’ என பெயர் வைக்கலாமா என ஆலோசனையும் செய்துவருகிறார்களாம்.