35 படங்களில் 107 பாடல்கள் எழுதி நா.முத்துக்குமார் சாதனை..!

இந்த வருடத்தில் அதிக படங்களில், அதிக பாடல்கள் எழுதியவர் என்கிற பெருமையை தட்டிச்செல்கிறார் நா.முத்துக்குமார். அதிலும் 35 படங்களில் 107 பாடல்கள் என்பது மிகப்பெரிய சாதனை. தவிர, இதில் பத்து படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தருவது, இயக்குனர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பது, பிரபலங்கள், புதுமுகங்கள் என பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் சரிசமமான பங்களிப்பை தருவது இவைதான் நா.முத்துக்குமாரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்..

வரும் ஆண்டிலும் முதல் இடத்தை தக்க வைக்கும் விதமாக தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் நா.முத்துக்குமார். மேலும் அவர் எழுதிய பாடலுக்காக இந்த வருடம் தேசிய விருது உட்பட பல விருதுகளால் கெளரவம் பெற்றிருக்கிறார் நா.முத்துக்குமார்.