முக்கோண ஏமாற்றுக்கதையில் ஆயா, நரி, காக்கா யார் யார்..?

‘ஆயா வட சுட்ட கதை’யை நாம் சின்ன வயதில் நம் பாட்டி சொல்ல கேட்டிருப்போம்.. இப்போது அதையே புதிய வடிவத்தில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பணிந்திரா.. சுருக்கமாக சொல்வதென்றால் இது ஒரு முக்கோண ஏமாற்றுக்கதை.

இந்தகதை நடக்கும் களம் ஒரு பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு விதமான மக்களை சார்ந்தது இந்த குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களக்கும், அங்கு புதிதாக குடிவந்த சட்டவிரோதிகளுக்கும் அங்கேயே குடியிருக்கும் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் ‘ஆயா வட சுட்ட கதை’ படத்தின் கதை.

இதில் கதாநாயகி துறுதுறுப்பான ஒரு இளம்பெண்.. அந்த இளைஞர்களோடு பழகி வருபவள்.. அதுவும் நட்பாக மட்டுமே. இதில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பது படம் பார்த்தால்தான் புரியும்.. ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள அவிதேஜ், சுபர்ணா உட்பட அனைவரும் புதுமுகங்கள் தான்.