திருச்சி விழாவில் நாசரை கேவலமாக திட்டிய ராதாரவி..!

தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் நலிந்த நாடக கலைஞர்களுக்கு புத்தாடைகளும், மற்றும் தீபாவளி உதவித்தொகையும், திருச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் ராதாரவி அவர்களால் வழங்கப்பட்டது. கூடவே ஒருகாலத்தில் நடிகர்சங்க பொருளாளராகவும் இன்று துணை தலைவராகவும் இருக்கும் கே.என்.காளையும் கலந்துகொண்டார்.

நல்ல விஷயம் தான்.. ஆனால் ஒரு சீனியர் நடிகரான ராதாரவி தான் என்ன பேசுகிறோம் என்பதை உணராதவர் போல சக நடிகர்களை ஏக வசனத்தில் பேசியதாக பெருமையுடன் சொல்லி அதன்மூலம் கைதட்டல் வாங்கிய அநாகரிகமான செயலைத்தான் குறிப்பிட விரும்புகிறோம்..

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி, “ஒருதடவை நடிகர்சங்கக் கூட்டத்துல இந்த நாசர் இருக்கான்ல்.. அவனை போடா மயிறு’ன்னு சொன்னேன்.. ஆமாம் அப்படியேதான் சொன்னேன்.. என்னங்க இப்படி சொல்றீங்கன்னாங்க.. ஆமா அவன் வெளியூர் நாடக நடிகர்களை சேர்க்க கூடாதுன்னு சொன்னான்.. அதான் போடா மயிருன்னுட்டேன்..” என நாசரை தான் கெட்டவார்த்தையில் திட்டியதை சந்தோஷமாக பகிர்ந்துகொண்டார்.

அடுத்து இவரிடம் சிக்கியவர் கேப்டன் விஜயகாந்த்.. மறைந்த நடிகர் அலெக்சின் உதவும் குணம், அறிவு இவற்றைப்பற்றி பேசிய ராதாரவி, “அலெக்சை என்கூட சேர்த்துக்கிட்டப்ப விஜி( கேப்டன் தான் ) கேட்டாப்புல.. ஏன்யா.. உங்க ஊருக்காரன்னு கூட சேத்துக்கிட்டு சுத்துறியான்னார்.. சரி உங்க ஊர்ல அறிவாளி யாராவது இருந்தா சொல்லுங்க.. சேத்துக்கிறேன்னேன்.. அவர்கூட அறிவாளி யாராவது இருப்பானா.?” என விஜயகாந்தை கலாய்த்த கதையையும் சொன்னார்.

“கெட்டவார்த்தைல பேசுறீங்களேன்னு கேட்குறாங்க.. இப்ப வர்ற சினிமாவை பாருங்க.. அதுல இல்லாத கெட்டவார்த்தையா..? ஆமாங்க.. எனக்கு தாங்கமுடியலைன்னா கெட்டவார்த்தை பேசிருவேன்”.. என்று கெட்டவார்த்தையில் பேசுவதற்கு லாஜிக்கும் சொல்கிறார். மொத்தத்தில் நடிகர் நாசர் மட்டுமின்றி அவரை எதிர்த்து பேசும் அணைத்து நடிகர்களையும் படு மட்டமாகவும், கேவலமாகவும் மிரட்டும் விதமாகவும் பேசியுள்ளார். (கீழே உள்ள காணொளியை பார்க்கவும்)

காளை பேசும்போது, “நடிகர்சங்க இடத்தில் தனியாருக்கு கட்டடம் கட்ட அனுமதித்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டுவதற்காக சரத்குமார் உருவாக்கிய திட்டம் அருமையான திட்டம்.. அதை செயல்படுத்தியிருந்தால் நலிந்த நாடக கலைஞர்களுக்கு இன்னும் பல உதவிகளை வழங்கியிருக்கலாம். ஆனால் இந்த பூச்சி என்கிற ஒரு நாய், தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்து அதை தடுத்துவிட்டான். இந்த மாதிரி பேசற நாய்கள் எல்லாம்” என குறிப்பாக ராதாரவி சகாக்களை எதிர்க்கும் இளம் நடிகர்களை ஏக வசனத்தில் பேச அவரும் தவறவில்லை.

எவ்வளவு நாள்தான் இந்த மாதிரி பேசற ராதாரவியையும், காளையையும் சக நடிகர்கள் குறிப்பாக இளம் நடிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள். இந்த செய்தியை படித்த பிறகு மற்றும் கீழே உள்ள காணொளியை பார்த்த பிறகு சக நடிகர்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ளபோகிரார்கள் என்பது விரைவில் தெரியவரும்.