விரைவில் வெளியாகிறது கபிலன் வைரமுத்துவின் பத்தாவது புத்தகம்..!

கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்துவின் வெற்றிகரமாக தனது பத்தாவது புத்தகத்தை எழுதியுள்ளார். இது ‘மெய்நிகரி’ என பெயரிடப்பட்ட இந்த புத்தகம் இவரது மூன்றாவது நாவலாகும். ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழும் ரியாலிட்டி ஷோ பற்றிய கதையே இந்த நாவல்.

முழு நாவலும் ஒரு படத்தொகுப்பாளரின் பார்வையால் சொல்லப்பட்டிருப்பதால் நூதன முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. காட்சி ஊடகம் பற்றிய ஒரு கலகலப்பான விவாதமாக இந்த நாவல் இருக்கும் என்கிறார் கபிலன் வைரமுத்து.

இதற்காக www.meinigari.com என்ற அறிமுகத்தளம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதைக்களமும், கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாவல் வெளியிடுவதற்கு முன் டீசர் போஸ்டர், வெப்சைட் என்று சமூக வலைத்தளங்களில் மெய்நிகரி பரவிக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் இறுதியில் கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.