இரண்டு சிங்கங்களுக்கும் ஒரே நாளில் விருந்து..!

ஆகஸ்ட்-15 சுததிரதின கொண்டாட்டம் மட்டுமல்ல.. பாலிவுட், கோலிவுட் உட்பட திரையுலகினருக்கும் அன்று உற்சாக கொண்டாட்டம் தான்.. குறிப்பாக தமிழில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் வெளியாக இருப்பதைபோல் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடித்த ‘சிம்ஹம் ரிட்டர்ன்ஸ்’ படமும் அன்றுதான் வெளியாகிறது.

இது இந்தியில் வெளியான ‘சிம்ஹம்’ படத்தின் இரண்டாம் பாகம் தான். அஜய் தேவ்கன் நடித்துள்ள இந்தப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். ஆனால் ‘சிம்ஹம்’ படத்திற்கான கதையை தமிழில் இருந்து வாங்கி ரீமேக் செய்த ரோஹித் ஷெட்டி, அதன் இரண்டாம் பாகத்திற்கு ஹரியிடம் இருந்து கதையை வாங்காமல் தானே புதிய கதையை உருவாக்கியுள்ளார்.

அதனால் அவர்களது இந்த இரண்டாவது ‘சிம்ஹம்’ எப்படி இருக்கும் என்று பார்க்கின்ற ஆவல் பாலிவுட்டுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் கூட இருக்கிறது. இருந்தாலும் ‘சிங்க’மாக மாறிய இரண்டு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ஒருவகையில் ஆச்சர்யம் தான்.