‘சிக்கந்தர்’ இசைவெளியீட்டு விழாவில் சூர்யா-சமந்தா சண்டை

ஆகஸ்ட்-15ல் சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் ரிலீசாகிறது. தெலுங்கில் இந்தப்படம் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நாகார்ஜூனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேடையில் சூர்யா பேசும்போது ஏற்கனவே ராஜமவுலியின் படத்தில் ஒருமுறை நடிக்க வாய்ப்பு வந்து மிஸ்ஸானதை குறிப்பிட்டவர், அடுத்து ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும், முடிந்தால் தற்போது அவர் இயக்கிவரும் ‘பாஹூபாலி’யில் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு தந்தால் கூட நடிக்க தயார் என்றும் ஒரு கோரிக்கையை வைத்தார்..

ஆனால் அடுத்து பேசிய சமந்தா ராஜமவுலியிடம் நான் தான் உங்களிடம் முதலில் வாய்ப்பு கேட்டேன் எனக்குத்தான் தரவேண்டும் என ஜாலியாக கலாட்டா செய்தார். ஏற்கனவே ராஜமவுலியின் இயக்கத்தில் ‘நான் ஈ’ படத்தில் நடித்து வெற்றிக்கனியை ருசித்தவர் தானே சமந்தா..