நடனத்துக்காக தாவணி கட்டும் நீதுசந்திரா..!

தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘ஆதிபகவன்’ என சில தமிழ் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. தன்னை இயக்குனர்கள் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்டினாலும் அதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடியவர் தான் நீது சந்திரா. ஆனால் தனது கவர்ச்சி ஆபாச எல்லையை ஒருபோதும் தொடாமல் பார்த்துக்கொள்வார் நீது.
Neetu Chandra 1
இப்போது நீது சந்திரா, பெருமாள் பிள்ளை என்பவர் இயக்கும் ‘திலகர்’ என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருக்கிறாராம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் ‘டம் டம் டம்’ என்று ஆரம்பிக்கும் அந்தப்பாடலில் தாவணி எல்லாம் கட்டி கிறக்கமான ஆட்டம் ஆடியிருக்கிறாராம்.

இதற்குமுன்னால் தமன்னா, ஸ்ருதிஹாசன் உட்பட சில நடிகைகளுக்கு இப்படித்தான் சேலை கட்டி, தாவணி கட்டி ஆடவிட்டு பலபேரின் வயித்தெரிச்சலுக்கு ஆளானார்கள் சில இயக்குனர்கள்.. இப்போது நீது சந்திராவையும் அதே மாதிரிதானா என ரசிகர்கள் காதில் புகை வருவது தெரியுது.

ஆனால் ‘ட்ராபிக் சிக்னல்’, ‘ஓய் லக்கி! லக்கி ஓய்!’ என இந்தியில் தேசியவிருதுபெற்ற இரண்டு படங்களில் நடித்தவருக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது இல்லையா..? அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் நீது சந்திராவுக்கு இருக்கிறதே.. அதுதான் இந்த தாவணியில் லாவணி..