‘பேய்’ படத்தில் ‘நயன்தாரா’

nayans-nee-enge-en-anbe

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்த நயன்தாரா, இரண்டாவது ரவுண்டானாலும் சரி, மூன்றாவது ரவுண்டானாலும் சரி தான் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்து வருகிறார். அடுத்தடுத்த படங்களின் ஹிட், டாப் கதாநாயகர்களின் படங்கள் என அவரே தமிழிலும், தெலுங்கிலும் கோலோச்சி வருகிறார்.

தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’ என ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார் நயன்தாரா. அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘பூச்சாண்டி’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘ஆதவன்’ படத்துக்கு பின் இருவரும் இணையும் படம் இது. ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இது தவிர, ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் நாயகியை மையப்படுத்திய ஒரு திகில் படத்திலும் நடிக்கிறார். அஸ்வின் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘நெடுஞ்சாலை’ சத்யா இசை அமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் டென்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை.

படத்தின் கதையை கேட்டதும் உடன் நடிப்பவர்கள் யார், டெக்னிஷியன்கள் யார் என்றெல்லாம் கேள்வி கேட்காமல் உடனே ஓகே சொல்லி விட்டாராம் நயன்தாரா. அதோடு தொடர்ச்சியாக 30 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறாராம். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படம் குறுகியகால தயாரிப்பாக உருவாகி வருகிறது.