“‘நீ நான் நிழல்’ மூன்றுமே நான் தான்” – புதிர் போடும் சரத்குமார்

‘ஜக்குபாய்’ படத்தை தொடர்ந்து தற்போது நடித்துள்ள ‘நீ நான் நிழல்’ படத்திலும் சரத்குமார் வெளிநாட்டு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது ஆச்சர்யமான விஷயம் தான். இதில் அன்வர் அலி என்கிற போலீஸ் அதிகாரியாக, ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளார் சரத்குமார். படத்தை ஜான் ராபின்சன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் “நீ நான் நிழல்” யார் யார் என கேட்டால் மூன்றுமே நான் தான் என்கிறார் சரத்குமார். படம் வரும் 1௦ஆம் தேதி வெளியாகிறது. பொது சரத்குமார் போடும் புதிருக்கான விடை தெரிந்துவிடப்போகிறது.