பிரதமரின் ‘தூய்மை பாரதம்’ இயக்கத்தில் இணைந்த கமல், சூர்யா..!

கமலும் சரி.. சூர்யாவும் சரி.. சமூக நோக்கிலான காரியங்கள் என்றால் அதற்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவிப்பார்கள்.. அப்படித்தான் கடந்த காந்தி ஜெயந்தி அன்று நமது பிரதமர் மோடி அவர்கள், ஒவ்வொரு குடிமகனும் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த ‘தூய்மையான பாரதம்’ என்கிற பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடம் சென்றடைய இந்தியாவில் உள்ள சில பிரபலங்களையும் இந்த பிரச்சாரத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் உலகநாயகன் கமலுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதை கமலும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது சூர்யாவும் இந்த ‘தூய்மையான பாரதம்’ பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்.