“வதந்திக்கு விளக்கம் கொடுத்தா உண்மை ஆகிரும்..” – கத்தி விழாவில் விஜய் ‘நச்’

நேற்று நடைபெற்ற ‘கத்தி’ பட விழாவில் இதுநாள் வரை இந்தப்படத்தை குறித்து எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்தவர்களுக்கு தான் பதிலேதும் கூறாதது ஏன் என தனது சூசகமான பேச்சின் மூலமே விளக்கம் கொடுத்தார் விஜய்..

இந்த விழாவில் இறுதியாக பேசிய விஜய், “உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது இன்னும் தெளிவா ஆகிடும். ஆனா வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அது உண்மை ஆகிடும்.. படம் எடுக்குறது சண்டைபோடுறதுக்கு இல்ல.. எல்லோரும் சண்டை, சச்சரவுகளை மறந்து சந்தோஷமா பார்த்து ரசிக்கிறதுக்குத்தான். நான் தியாகியா என்னன்னு எனக்கு தெரியாது.. ஆனா நான் துரோகி இல்ல.. எந்த ஒரு மக்களுக்கும் ஆதரவாகவோ இல்ல எதிராகவோ நிச்சயமா இந்தப்படத்தை எடுக்கலை..” என கூறினார்.