Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காதலித்த குற்றத்திற்காக சவுக்கடிகளை பெற்ற காதல் ஜோடிகள்: இந்தோனேஷியாவில் பதற்றம்!

On June 6, 2025
n6672445391749150286811cb509d7a4ba0e77559df4f66f9f61cd6b3935415499f67c16144a23dc89b146d
Share
கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த நாட்டில் திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவு கொள்வதற்கு தடை செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த நாட்டில் திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவு கொள்வதற்கு தடை செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு பாலில் உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று கருதப்படுகிறது. இதன்படி அங்கு தவறு செய்பவர்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்குவது வழக்கம். இந்நிலையில் தற்போது ஒரு காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பாகவே பாலியல் உறவு கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டது குற்றம் என கருதப்பட்டு பொதுவெளியில் அவர்களுக்கு 100 சவுக்கடி தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த புகைப்படங்களும் வெளிவந்துள்ளது. அதில் முகமூடி அணிந்த சிலர் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் 100 சவுக்கடி கொடுக்கிறார்கள். அவர்கள் வலியால் முகம் சுளிக்கும் நிலையில் பின்னர் அந்த ஆணை கை தாங்கலாக அவர்கள் அங்கிருந்து அழைத்து செல்வதும் தெரிகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.