உதயநிதியின் காலில் விழுந்தாரா சேகர்பாபு? வைரலாகும் வீடியோ!

திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உதயநிதிக்கிடையே அவ்வபோது தேவையற்ற வாக்குவாதங்கள் நிலவுவதுண்டு.
அதிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் உதயநிதிக்கும் இடையே பெரும் மோதல் போக்கு இருந்தது. இந்த மோதல் போக்கானது உட்க்கட்சிக்குள் முடிந்து விட்டாலும் தற்போது வரை அது ரீதியான பேச்சு இருந்து தான் வருகிறது.
அதிலும் சேகர் பாபு ஸ்டாலின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கம். குறிப்பாக அவரது மனைவிதான் இவருக்கு பெரிய தலைவர் என்றே கூறலாம். இவர்களுக்குள் உருவான மோதல் ஸ்டாலினிடம் செல்வதற்கு முன் அவரது தாயின் ஆதரவு முழுவதுமே சேகர்பாபு பக்கம்தான் இருந்ததாம். சமீபத்தில் கூட துர்கா ஸ்டாலினை வழி அனுப்பி வைத்த சேகர் பாபு கார் கதவை மூடும் பாணியில் அவர்களது காலை தொட்டு வணங்கினார்.
https://x.com/knrsivaraj80/status/1938793797221261729?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1938793797221261729%7Ctwgr%5Edb057231c35e9a3519fa8aa0c5bb74f18989a691%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
அந்த வீடியோ இணையத்தில் பரவியது. அதேபோல தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் சேகர்பாபு யாரும் பார்க்கவில்லை என நினைத்து உதயநிதியின் காலை தொட்டு வணங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன் நடந்த விவாதத்திற்கு பொதுவெளியில் இப்படி சேகர்பாபு மன்னிப்பு கேட்பது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
