பஹல்காம் தீவிரவாதிகள் பற்றிய முக்கிய ஆதாரம் கொடுத்த சுற்றுலா பயணி!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு சென்று இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 26 உயிர்களைப் பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பற்றியஒரு முக்கியமான ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளனர்.
காஷ்மீருக்கு அவர்கள் மேற்கொண்ட சுற்றுலாப் பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடிய தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு இரண்டு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் காணப்பட்டவர்கள், கொடூரத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த அதே குற்றவாளிகளா என்பதைத் தீர்மானிக்க, அந்த வீடியோ இப்போது தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் (NIA) மேலும் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
