மசாஜ் சென்டரில் மஜா : போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய பெண்!

அண்ணா நகரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை கூறுகையில், “அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீசார், அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இதில், மசாஜ் சென்டரின் உரிமையாளரான திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பிரேமா (30) என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான பிரேமாவிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைக்கப்பட்டிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிரேமா விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
