Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

த வெ க வுக்கு 60 சீட் : புட்டு புட்டு வைத்த அன்வர் ராஜா!

On August 2, 2025
n6750266131754073203272b3bab651b49a79951c0dad441ea63dbc57931a945600e50477ce8d6bf4be027c
Share

அ.தி.மு.க.வை விட்டு தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஒரு ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் நடக்கும் கூட்டணி அரசியலைக் குறித்தும், அதில் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு பாதிக்கப்பட்டு வருகிறார் என்பதையும் விவரித்துள்ளார்.

"பா.ஜ.க. திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது. அதனால்தான் பல விஷயங்களில் அவர் மவுனமாக இருக்கிறார்" என அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகுகிறார்கள் என்றும், தற்போது அந்த கட்சியை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் பலர் மனக்கொதிகொண்டு இருப்பதாகவும், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்வதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் போய்விடும் என்று அவர்கள் கவலைப்படுவதாகவும் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.



அது மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஆரம்பத்தில் கூறியிருந்தார் என்றாலும், பின்னர் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். அ.தி.மு.க. தரப்பில் விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை வழங்க தயார் எனும் தகவலும், விஜய் கட்சி முதல்வர் பதவி வேண்டும் என கேட்டதால் தான் அந்த பேச்சுவார்த்தை நிறைவு பெறவில்லை என்றும், ஆனாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருந்தது என்றும் அவர் கூறினார்.

இந்த தகவல்கள் பா.ஜ.க. தலைவர்களுக்குத் தெரிய வந்ததும், விஜய் கட்சி-அ.தி.மு.க. கூட்டணியால் பா.ஜ.க.க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து, அமித் ஷா அவசரமாக சென்னைக்கு வந்து, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்ததாகவும், அதற்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாகவும் அன்வர் ராஜா கூறினார்.

"பா.ஜ.க. திட்டத்தின் பாதிப்பு அ.தி.மு.க.வுக்கு வரப்போகிறது என்பதையும், அதனை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் வேறு வழியின்றி அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் அன்வர் ராஜா ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.