Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழ்நாட்டுக்கு போதிய நிதி வழங்கவில்லையா? பிரதமர் மோடி ஆவேச பேச்சு!

On July 27, 2025
n6742344651753556491562e3f104e824d9e7e70f3d3feb4cc96937b42fb84fb522656a3344c3fe4c77987a
Share

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தப் பின்னர் நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் குறித்தும், நாட்டின் வளர்ச்சியின் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்தும் உரையாற்றினார். அவர் பேசிய உரையின் விவரம் பின்வருமாறு, "இன்று கார்கில் வெற்றித்திருநாள். இந்த நாளில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். நான்கு நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு ராமேஸ்வர புனித பூமியில் கால்பதிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம் சிவனின் ஆசீர்வாதத்துடன் தமிழகத்தின் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். தூத்துக்குடியின் மண் புரட்சியின் சாட்சியாக இருந்த மண். ஆழ்கடல் பகுதியில் சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை. வீரபாண்டிய கட்டபொம்மன், அழகு முத்துகோன் ஆகியோர் சுதந்திரமான பாரதம் என்ற கனவை உருவாக்கியவர்கள். இத்தகைய தூத்துக்குடி மண்ணில் அந்த மக்களிடையே இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அன்மையில், பிரிட்டனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்திற்கு உத்வேகம் கிடைத்துள்ளது. பிரிட்டனில் விற்பனையாகும் 99% இந்திய பொருட்களுக்கு இனி வரி கிடையாது. தற்சார்பு இந்தியாவின் உயிர்நாடியாக ரயில்வே துறை உள்ளது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து ரயில்வே பாலம் தமிழ்நாட்டில்தான் உள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஆபரேஷன் சிந்தூரில் இந்திய தயாரிப்பு தளவாடங்கள் பெரும் பங்கு வகித்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கிறது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளோம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.