Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தன் 13 வயது மகளை, கள்ளக்காதலனக்கு இரையாக்கிய தாய்: எங்கே செல்கிறது நாடு?

On June 7, 2025
n667327267174923868326191e58435233e8ae27b914ebf26b26360255e8cb50200355e6513fe5fd369a067
Share

பாஜக மாவட்ட பிரிவில் பதவி வகித்து வந்த பெண் பிரமுகர் ஒருவர் தன் கணவனை பிரிந்து 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.


அப்போது அவருக்கும் வேறு ஒரு நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த பெண் பிரமுகரின் மகள் மீது ஆசைக் கொண்ட அந்த காதலன் பெண் பிரமுகரின் 13 வயது மகளை வன்கொடுமை செய்துள்ளான்.
இந்த விஷயம் பெண் பிரமுகருக்கு தெரிந்தபோதும், அதன் பின்னரும் தொடர்ந்து தனது காதலனுக்கு பெற்ற மகளையே இரையாக்கியுள்ளார் அவர். தொடர்ந்து சிறுமியை ஆக்ரா, பிருந்தாவன் என பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று, விடுதியில் வைத்து பெண் பிரமுகரின் காதலனும், மற்றொரு நபரும் தாயின் முன்பே வைத்து வன்கொடுமை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து எட்டு முறை அந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதை யாரிடமாவது சொன்னால், உனது அப்பாவை கொன்று விடுவோம் என சிறுமியை அவர்கள் மிரட்டி வைத்துள்ளனர்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி, அதை தனது அப்பாவிடம் சொல்லியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாஜக பெண் பிரமுகரையும், அவரது காதலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு தலைமறைவான மற்றொரு நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.