காதலனை நம்பி காட்டுக்குள் போன காதலி: கடைசியில் நடந்த வெறிச்செயல்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோட்பாலி மந்திர் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவரை ரஃபி என்ற வாலிபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காதலனுக்கு உள்ள தீய பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்கு தெரியவந்தது.
இதையடுத்து காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் இளம்பெண். இதனால் கடுப்பான ரஃபி, உன்னிடம் பேச வேண்டும் என காட்டு பகுதிக்கு அழைத்துள்ளார்.
காதலனை நம்பி காட்டுக்குள் போன இளம்பெண், கடும் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபமான இளம்பெண், காதலனை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஃபி, இளம்பெண்ணை ஸ்க்ரூ டிரைவைரை வைத்து குத்தி குத்தி கொலை செய்துள்ளார். இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் குத்தியதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தனது ஆத்திரம் தீர 35 இடங்களில் ஸ்க்ரூ டிரைவரால் குத்தி குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து ரஃபியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
