Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கள்ளக்காதலால் சொந்த கணவனையே கொலை செய்து விட்டு பாம்பு கடித்து விட்டதாக நாடகமாடிய மனைவி!

On April 18, 2025
WhatsApp Image 2025-04-17 at 23.12.25
Share

கள்ளக்காதலருடன் சேர்ந்து கப்பல் பொறியாளரான கணவரை கொலை செய்த மனைவி அவரின் உடலை ட்ரம்முக்குள் அமுக்கி சிமெண்ட் போட்டு மூடிவிட்டு, தனது ஆசைநாயகருடன் உல்லாச சுற்றுலாவுக்கு சென்ற அதிர்ச்சி சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் அரங்கேறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அதே மீரட் நகரின் அருகே தான் மீண்டும் ஒரு படுபாதக சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

மீரட் அருகே அக்பர்பூர் சதாத் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆன அமித். இவருக்கு ரவீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இருவரும் தனியே வசித்து வந்தனர்.

2 நாட்களுக்கு முன்னர் அமித் தூங்கிய நிலையில் தனது படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். அவரின் உடல் அருகே பாம்பு ஒன்று இருந்ததால் அவர் பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என கிராமத்தாரால் கருதப்பட்டது. இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது.


இதனிடையே, அமித்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாம்பு கடியால் அவரின் மரணம் அடையவில்லை என்று தெரியவந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் அமித்தின் மனைவி மீது திரும்பியது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான் தான் என் கணவரை கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

கொலைக்கான காரணம் என்ன?

ரவீதாவுக்கும், அமர்ஜீத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இது கணவர் அமித்துக்கு தெரியவந்தபோது கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னை வெடித்தது. இது தொடர்பான பிரச்னை முற்றிய நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அமித்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் ரவீதா.

பாம்பு நாடகம்..

பின்னர் கொலையை மறைப்பதற்காக ஒரு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி அருகே ஒரு பகுதியில் இருந்து விஷப் பாம்பு ஒன்றை 1,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி வந்த ரவீதா, கணவரின் உடல் அருகே அந்த பாம்பை போட்டுவிட்டு, தன் கணவரை பாம்பு கடித்துவிட்டதாக நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

ஆனால் அவரின் நாடகம் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அம்பலமானது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ரவீதாவும், அவருக்கு உதவியதாக அவரின் கள்ளக்காதலர் அமர்ஜீத்தையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரங்களில், மனைவிகளால் கணவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது..!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.