ரஜினியின் “கோச்சடையான்” இன்னும் வியாபாரம் ஆகவில்லை – கேயார்:

“நாங்கெல்லாம் ஏடாகூடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்’யில் இன்று (21 ஏப்ரல் 2014) நடைப்பெற்றது. இத்திரைப்படத்தை குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என ஆர்.விஜயகுமார் செய்ய, சரவணன் பிள்ளை ஒளிப்பதிவை கையாள, சார்லஸ் மெல்வின் இசை அமைத்துள்ளார். மனோஜ் தேவதாஸ் கதாநாயகனாகவும், வீணா நாயார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், தமிழ் திரைப்பட கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குனர் களஞ்சியம், கவிஞர் சிநேகன், நடிகை நிரோஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் பேசிய கேயார் தயாரிப்பாளருக்கு தைரியம் சொல்லும் விதத்தில், “தயாரிப்பாளருக்கு கொஞ்சம் பயம் இருக்கும், இசை வெளியீடு முடிந்துவிட்டது ஆனால் இன்னும் வியாபாரம் ஆகவில்லையே என்று. பயப்படாதீர்கள், “கோச்சடையான்” திரைப்படமே இன்னும் வியாபாரம் ஆகவில்லை. கேயார்’யின் “கோச்சடையான்” பற்றிய பேச்சை கேட்ட இசை வெளியீட்டு விழாவில் கூடியிருந்த பார்வையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் இது உண்மையா என முனுமுனுதுக்கொண்டனர்.