தமிழில் தான் என் முழுகவனமும், சித்தார்த் அதிரடி!!

Siddharth-Narayan-180-Movie-Latest-Stills_3

தமிழில் நடிப்பதற்கே நேரமில்லை என்று சொல்லி தெலுங்கில் இருந்து வரும் வாய்ப்புகளை ஏற்காமல் இருப்பதாக சித்தார்த்.

இது குறித்து சித்தார்த் கூறுகையில், “தமிழில் முழு கவனத்தையும் செலுத்தாமல் தெலுங்கு, இந்தி என்று பரவலாக நடித்த காரணத்தினால் தான் இப்போது வரை தமிழில் சரியான இடம் கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான நான், இப்போதும் புதுமுக நடிகர் போலவே வளர்ந்து வரும் சூழல் உருவாகியிருக்கிறது.

மேலும், காதலில் சொதப்புவது எப்படி படத்தின் வெற்றிக்குப்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு படமும் ஹிட்டடித்ததால் இப்போது தமிழில் வியாபார ரீதியாக எனக்கென ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அதோடு, பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள ஜிகர்தண்டா படம் என்னை பெரிய கமர்சியல் ஹீரோவாக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பாண்டியநாடு, ஜில்லா போல, மதுரைக்களத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டாவில் இதுவரை பார்த்திடாத சித்தார்த்தாக இருப்பேன். அதனால் ஜனவரியில் ஜிகர்தண்டா திரைக்கு வந்த பிறகு தமிழ் சினிமாவில் எனக்கென்று ஒரு தனி இடம் கிடைக்கும் என்றும் அடித்து சொல்கிறார் சித்தார்த்.