அஜித் கண்ணாடியை கழற்ற சொல்லி வம்பில் மாட்டி கொண்ட நடிகை!!

akshara

உலகெங்கும் வசூல் சாதனை புரிந்துவரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய மந்திரி மகளாக நடித்து அஜீத்குமாரின் குளிர்கண்ணாடியை கழற்றசொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான அக்க்ஷரா கவுடா அந்த காட்சியை பற்றியும், ஆரம்பம் திரைப்படத்தை பற்றியும், தன்னைபற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் .

“நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்துக்கொண்டு இருந்தவள். என் நல்லநேரம் அந்த தருணம் என் திரை உலக பயணத்தில் ஆரம்பத்திலே அமைந்தது. அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்க்கும்போது தான் தெரிந்தது. பயமாக இருந்தது என்றால் மிகைஆகாது. அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜீத் சார் தான் என்னை தைரியமூட்டினார். இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்லபெயர் கிடைத்து இருப்பதற்கும் அவரே காரணம். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை அவருடன் பழகிய நாட்களில் புரிந்து கொண்டேன். ஆரம்பம் நாட்களை நான் என்றும் நினைவில் கொள்வேன்.

நான் ஒரு பரத கலைஞர். சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு. நாடோடிகள் ஹிந்தி பதிப்பான ‘Rang Race’ படத்தில் நடித்து உள்ளேன். எனக்கு பிடித்த நடிகர் Hollywood நடிகர் Bradley cooper. பிடித்த நடிகை கரீனா கபூர், அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டு கோப்பாய் வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள். விளையாட்டு துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. நான் தேசிய அளவில் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டவள். விளையாட்டு துறையில் உள்ளதனாலோ, என்னவோ எனக்கு மன உறுதியும், திடமும் அதிகம். அந்த உறுதியோடு தமிழ்த்திரை உலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன்’ என்கிறார் அக்க்ஷரா கவுடா.