தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்கள் பாடுவது வழக்கமாகி விட்டது. சிம்பு, தனுஷ், விஷால், கார்த்தி என அனைத்து ஹீரோக்களும் பாடி வருகிறார்கள். இந்நிலையில் நாயகிகளும் பாட ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் ரம்யா நம்பீசன் ‘பாண்டியநாடு’ படத்தில் ‘பை பை கலாய்ச்சி வை’ என்ற பாடலை பாடி ஆரம்பித்து வைத்துள்ளார். இப்பாடல் ஹிட் ஆகியிருப்பதால் மற்ற நாயகிகளும் பாடும் ஆசையில் உள்ளனர்.
இவரைத் தொடர்ந்து பிந்து மாதவியும் இமான் இசையில் பாட வாய்ப்பு கேட்டு வருகிறார். லட்சுமி மேனனும் தான் நடிக்கும் ஒரு படத்திலாவது பாடி விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்து வருகிறார்.
இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் சேர்ந்துள்ளார். இவர் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் தன்னுடைய பாடும் ஆசையை கூறியிருக்கிறார் பிரியா ஆனந்த். யுவனும் அவரை பாட வைக்க முன்வந்துள்ளார்.