நான் நடிச்சதிலேயே முக்கியமான கேரக்டர் – ஹன்சிகா!!

994955_598238430215308_1349799841_n

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி படத்தில் மீண்டும் நடிக்கிறார் ஹன்சிகா. இந்த படத்தில் சுந்தர் சி., வினய் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். குடும்பக் காமெடிப் படங்களை இயக்கும் சுந்தர்.சி இந்த படத்தில் த்ரில்லரை கையில் எடுத்துள்ளார். இப்படத்தில் ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா என மூன்று ஹீரோயின்கள். இதில் யார் யாருக்கு ஜோடி என்ற விவரம் இன்னும் ரகசியமாக உள்ளது.

1௦ நாட்களுக்கு முன்பு அரண்மனை படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில் அரண்மனைப் படப்பிடிப்புத் தளத்தில் தனது முதல் நாள் நடிப்பு அனுபவம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹன்சிகா. அவர் கூறும்போது, ”இந்தப் படத்தில் நடிப்பதில் முதல்முறையாக பதற்றமாக உணர்கிறேன். இதுவரை நடிக்காத அளவுக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்” என்று தெரிவித்துள்ளார்.