தாத்தா, மகன், பேரன் நடிக்கும் மனம்!!

தெலுங்கில் ‘மனம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்திய சினிமாவில் முதன் முறையாக மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் படம்.

படத்தில் அக்னினேனி நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோர் முறையே தாத்தா, மகன், பேரனாகவே நடிக்கிறார்கள். படத்தை தயாரிப்பதும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்ணா ஸ்டூடியோ தான். படத்தை யாவரும் நலம் ‘விக்ரம் குமார்’ இயக்குகிறார்.

அக்னினேனி நாகேஸ்வரராவின் 90-வது பிறந்த நாளை ஒட்டி, படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இதோ உங்களின் பார்வைக்காக:::

16X25-QTR-Page-with-English-Logo