பிடிஆர் காரின் மீது செருப்பை தூக்கி எறிந்த பாஜக பெண் பிரமுகர் தஞ்சாவூரில் தலை துண்டித்து கொலை!

மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் பகுதியில் திருமணம் ஆகி வந்து அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு அவரது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வரும் பாலன் என்பவரது மனைவி சரண்யா (வயது35) நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கும் முன்பு மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் என்பவர் இறந்துவிட்ட நிலையில், சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(வயது45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவு (05.05.2205) பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று உள்ளனர். சரண்யா கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்து பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான முன்விரோதம் பற்றி வாட்டாத்திகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் செருப்பு எறிந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response