இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றும் பாராமல் கடித்துக் கொதறிய காமக்கொடூரன்

ராஜஸ்தான் சிரிசில்லா மாவட்டம் கஜ சிங்கம் வரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்த ரெட்டை கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த உல்லி ஸ்ரிகாந்த் (வயது 30) என்ற நபர், எதிர்புற வீட்டில் வசித்து வந்த சேருகூரி ரேகா (வயது 25) என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி, பிறகு கொலை செய்துள்ளார். பின்னர், அதே வீட்டில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட ரேகா, திருமணமாகியவராக இருந்தார். இவரது கணவர் த துபாயில் வேலை செய்து வருகிறார். ரேகா தனது இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவில் வசித்து வந்தார். குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரிகாந்த், ரேகாவை பாலியல் வன்கொடுமை செய்து, உடலின் பல பகுதிகளை கடித்து தாக்கிய பின், கூரிய கத்தியைப் பயன்படுத்தி அவரை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் சிரிசில்லா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், துணை காவல் கண்காணிப்பாளரும் சுற்றுவட்ட காவல் ஆய்வாளரும் நேரில் தங்கி நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Response