அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை சமூக வலைதளத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார். அதை தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் பொதுமக்களுக்கு விநியோகித்தார்கள். முன்னதாக, தனியார் மகளிர் கல்லூரி அருகே விநியோகிக்க கூடாது என்று காவலர்கள் தடுத்த நிலையில், வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களை காணச் சென்றபோது, தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் விஜயின் ரசிகர்களை மேலும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.