சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது துணை முதல் உதயநிதி ஸ்டாலினை அவர் மிகவும் புகழ்ந்து பேசினார்.
குறிப்பாக அவர் திரைப்படங்களில் நடித்ததை பற்றி பேசிய விஷயம் பேசும் பொருளாக மாறிய நிலையில் வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் கூறியதாவது, அவருக்கும் கல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரே ஒரு செங்கலை வைத்து தமிழகம் முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியவர். பல பேர் பல படங்களை எடுத்தார்கள். பல ஜாம்பவான்கள் படங்களை எடுத்தார்கள். அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்த நிலையில் பல படங்கள் வசூல் சாதனை புரிந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை எடுத்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதிலும் பார்த்தீர்கள் என்றால் கல்தான் இருக்கிறது என்று கூறினார்.
https://x.com/sangeet29332013/status/1864689210122489957?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1864689210122489957%7Ctwgr%5E5374a994e1109b8272f557fd10787dbea0ae2354%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்திருந்த நிலையில் இந்த படம் வெளிவந்து 12 வருடங்கள் ஆகும் நிலையில் அப்போது வெற்றியை பெற்றது. அந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். அப்படி இருக்கையில் அமைச்சர் நாசர் ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள அவரை விமர்சிக்கிறார்கள்.