தங்கை வித்யாவின் மரணம் போல் அனிதாவின் மரணமும் என்னை ரொம்ப பாதித்தது – த வெ க தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாட்டில் நடிகர் அனிதா பற்றி விஜய் உணர்ச்சிப்பொங்க பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதாவது: அறிவியல், தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக் கூடாதா? அரசியல்வாதிகளை இகழ்ந்து பேச மாட்டேன்; அதுக்காக கண்மூடியும் இருக்க மாட்டேன்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” யாரின் நம்பிக்கைக்கும் |எதிரானவர்கள் நாங்கள் அல்ல. பெரியார் தான் கொள்கை தலைவர். ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுக்கப் போவதில்லை.

பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெகவின் எதிரி. நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும். பத்தோடு பதினொன்றாக, மாற்றுக் கட்சி என சொல்லிக் கொண்டு Extra luggauge ஆக வரவில்லை; ஒரு முடிவோட தான்

வந்திருக்கிறேன் இனி No looking back.

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறி ஏமாற்றுகிறார்கள். அண்ணா, பெரியார் உள்ளிட்டோரின் பெயரை சொல்லி குடும்ப அரசியல் செய்து ஊழலில் ஈடுபடும் கட்சிதான் அரசியல் எதிரி. ஆவுன்னா ஏ டீம் பி டீம் என சொல்கிறார்கள். இவர்களாகவே ஏதாவது ஒரு நிறத்தை பூசுகிறார்கள்.

இந்த நிறத்தை தவிர எங்கள் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது. என் தங்கை வித்யா இறந்த போது என் மனம் எப்படி பாதிக்கப்பட்டதோ, அதே போல்தான் தங்கை அனிதா இறந்த போது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. திறமை இருந்தும் இந்த நீட் தேர்வால் அந்த சகோதரி தனது உயிரை இழந்தார். நீட் தேர்வை நீக்க வேண்டும் என விஜய் உணர்ச்சிப் பொங்க தெரிவித்தார்.

Leave a Response