தியேட்டருக்கு சென்ற இளம் பெண்ணை பலான படம் எடுத்த சிறுவன்..? எங்கே செல்கிறது நாடு..

இந்தியாவில் சமீப காலமாக கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு, கலாசிபாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திரையரங்கம் உள்ளது. இந்த தியேட்டருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது இன்னும் 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன், எதிரே அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அந்த இளம்பெண் தியேட்டர் கழிவறைக்கு சென்ற போது, ​​கழிவறை ஜன்னல் மீது செல்போனை வைத்து படம் எடுத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், கலாசிபாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டு, சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response