முடிவுக்கு வந்த சிங்கம்-II பிரச்சினை

IMG_0358a

சூர்யா – அனுஷ்கா – ஹன்சிகா – விவேக் – சந்தானம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் 2 படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய படமான மாற்றான் சரியாகப் போகாத நிலையில், சூர்யா இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள சிங்கம் 2 வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில், மல்டிப்ளெக்ஸ்களுடன் வருவாய் பகிர்வு முறையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தமிழகத்தில் மல்டிப்ளெக்ஸ்கள் அதிகம் உள்ள சென்னை – செங்கல்பட்டு – கோவை ஆகிய நகரங்களில் மட்டும் சிங்கம் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இன்று மதியம் வரை முன்பதிவு தொடங்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினை, இன்று மாலை முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, உடனடியாக அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு தொடங்கப்பட்டது. சென்னையில் உள்ள மாயாஜாலில் மட்டும் தினமும் 60 காட்சிகள் திரையிடப்படுகிறது.

நாளை மறுதினம் உலகம் முழுவதும் 2400 அரங்குகளில் வெளியாகிறது சிங்கம்-II. தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகிறது.