அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது
திரைப்படத்தின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக
16.4.2021 அன்று முடிக்கப்பட்டது.

‘Pramod Films’ சார்பில் தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா இது குறித்து கூறியதாவது,

“எங்களது 25 வது திரை படைப்பின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு
முடிக்கப்பட்டதை அறிவிப்பது பெரு மகிழ்ச்சி. இன்னும் இப்படத்தின் பாடல் காட்சிகள்
மட்டுமே படமாக்கப்படவேண்டியுள்ளது. அதனை சென்னையில் படமாக்க
திட்டமிட்டுள்ளோம். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. இந்த இனிய நேரத்தில் நடிகர் அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன்
மற்றும் படக்குழு அனைவரின் அயராத உழைப்பிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட பொருட்செலவில் படத்தின் படப்பிடிப்பை முடித்தார் இயக்குநர் சாம் ஆண்டன்.
விரைவில் படத்தின் பாடல்களின் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டு, படத்தின் ட்ரெய்லர், இசை
மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் சாம் ஆண்டன் கூறியதாவது,

“மிகச்சிறந்த ஒத்துழைப்பினை நல்கியதற்காக Pramod Films நிறுவனத்தாருக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அதிலும் இந்த பொது முடக்க காலத்தில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பு பணிகளை துவங்க தயங்கி நின்றபோது, துணிவாக களமிறங்கி மிகச்சிறந்த திட்டமிடலுன் இப்படத்தினை தயாரித்தனர். புது ஐடியாக்களுக்கு அவர்கள் எப்போதும் மறுப்பு தெரிவுத்ததே இல்லை. விரைவில் பாடல்களை படமாக்கவுள்ளோம். படம் ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக இருக்கும்” என்று கூறினார்.

100 பட வெற்றி கூட்டணி, திலீப் சுப்பராயன் ஒருங்கமைத்த, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட
ஆக்சன் காட்சி என இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும்
எதிர்பார்ப்புகளை விதைத்துள்ளது.

Leave a Response