SPB பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ! டத்தோ ராதாரவி

மறைந்த திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சாதனை பின்னணி பாடகராக மட்டும் திரைதுறையில் இல்லை, சிறந்த இசையமைப்பாளராகவும்,சிறந்த நடிகராகவும், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் முன்னணி கதாநாயகர்கள், நடிகர்களுக்கு பின்னணி குரலும்(Dubbing) பேசி இருக்கிறார்.
இசை, நடிப்பு, பின்னணிகுரல் என பல துறைகளில் சாதனையாளராக வாழ்ந்த
திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் டப்பிங் ஸ்டுடியோ விரைவில் திறக்கபடும் என டப்பிங் யூனியன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி தெரிவித்துள்ளார்.

டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, திரு எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது. மேலும் அவர் கூறுகையில் “டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும்” என தெரிவித்தார்.

Leave a Response