சாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…

ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். ரஜினியின் ‘காலா’ படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி வசம் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும், கதாநாயகிகளில் ஒருவர் இந்த சாக்‌ஷி அகர்வால். ஏற்கெனவே இவர் மலையாளத்தில் பிஜுமேனன் ஜோடியாக நடித்த படம் இவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. கூடுதல் செய்தியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்‌ஷி அகர்வால் தான் ஹீரோயின். தமிழ்சினிமாவில் இனி சாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு. இனி வரும் காலங்களில் சாக்‌ஷி அகர்வாலை தரமான படங்களில் சிறப்பான நடிகையாக காணலாம். இப்படங்கள் குறித்து, சாக்‌ஷி அகர்வால் கூறும்போது,

“ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் என் கரியரில் மைல்கல்லாக அமையும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறோர் தளத்தை அமைத்துத் தரும். நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை “இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்” என்று அழுத்தமாகச் சொன்னார். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப்பெரும் சந்தோஷம். அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இயக்குநர் அணீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியான வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்” என்றார். மேலும் எழில் இயக்கி ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் சாக்‌ஷி அகர்வால் தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி அசத்தி இருக்கிறாராம். இருக்கும் பாஷைகளிலே நெல்லைத் தமிழில் பேசுவது தான் கடினம் என்பார்கள். இதை கமல்ஹாசன் கூட ஒருமுறை பதிவு செய்திருக்கிறார். சாக்‌ஷி அகர்வால் சரளமாக நெல்லைத் தமிழை பேசி இருக்கிறாராம். அவரது ஆற்றலுக்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் படக்குழுவினர்.

Leave a Response