பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது : ஈரோடு மாவட்டம் முதலிடம்..!

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஈரோடு மாவட்டம் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது.

11ம் வகுப்புக்கு மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுக்க மொத்தம் 8.21 லட்சம் பேர் 11ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுவிற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இதில் ஈரோடு மாவட்டம் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது.ஈரோடு மாவட்டத்தில் 98% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 97.9% பெற்று திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 97.6% தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் மூன்றாம் பிடித்து இருக்கிறது.

வேலூரில் 89.29% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இதனால் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பெற்று இருக்கிறது.

Leave a Response