ராதிகாவுக்கு மவுசு கம்மியாம்! ஆளை மாற்ற சொன்ன தனியார் தொலைக்காட்சி!!

நடிகை ராதிகா அவர்களின் தயாரிப்பில் 2013 முதல் 2018 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்த தமிழ் சீரியல் ‘வாணி ராணி’. இதில் ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்து. இது முடிவடைந்த உடன் ‘சந்திரகுமாரி’ என்னும் புதிய சீரியல் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தொடங்கியது. இது ஒரு சரித்திர தொடர். இதிலும் இந்த சீரியலில் தயாரிப்பாளர் ராதிகா தான் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் நடிகை. இவருடன் உமா ரியாஸ், பானு, அருண் சாகர், வேணு அரவிந்த் எனும் ஒரு பெரிய பட்டாளமே நடிக்கின்றனர்.

‘வாணி ராணி’ தொடர் 14 புள்ளிகளை பெற்று டி.ஆர்.பி’யில் டாப் ராங்கில் இருந்து வந்தது. ஆனால் இந்த ‘சந்திரகுமாரி’ தொடரோ ஆரம்பத்தில் 9 புள்ளிகளை பெற்று பிறகு சில நாட்களாக 6 புள்ளிகளுக்கு குறைந்து தனது டி.ஆர்.பி தரத்தில் மிகவும் சரிந்த்துள்ளது.

‘சந்திரகுமாரி’ சீரியலின் டி.ஆர்.பி புள்ளிகளின் வீழ்ச்சி, தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் நடிகை ராதிகா அவர்களுக்கும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ‘சந்திரகுமாரி’ தொடரிலிருந்து ராதிகா நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் வேறு யாராவது ஒரு நடிகையை நடிக்க வைக்கும்படி தயாரிப்பு நிறுவனத்திடம் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ராதிகா அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளியேறி வேறு யாராவது அதே கதாபாத்திரத்தில் நடித்தால், ராதிகாவுக்கான மார்க்கெட் வேல்யூ மற்றும் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்ற காரணத்தினால் ராதிகா ஒரு மாஸ்டர் பிளான் செய்துள்ளார். அதாவது ராதிகா கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை தற்சமயம் குறைத்து, வேறு ஒரு பெண்ணுக்கு ஒரு புதிய கதாபாத்திரம் நிறுவி, அந்த நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக முடிவு செய்துள்ளார் ராதிகா. ராதிகாவுக்கு மாற்றாக வேறு ஒரு நாயகியை தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார் நடிகர் ராதிகா.

Leave a Response