விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர். அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் இந்த முறை பிறந்த நாளை ‘அடக்கமாகக்’ கொண்டாடினார் என்று கூறப்படுகிறது
வழக்கமாக தனது பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு இலவசப் பொருள்கள், அன்னதானம் என வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வந்த விஜய், இந்த ஆண்டு அமைதியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்து அளித்து பிறந்த நாளை கொண்டாடினார்.
காலையில் தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் எட்டு மணிக்கே ஜில்லா படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்டார். அங்கு படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர். கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார் விஜய்.
மேலும் படப்பிடிப்பில் இருந்த விஜயை நேரில் வந்து சந்தித்து இயக்குனர், நடிகர் மனோபாலா, நடிகர் ஜீவா, அவரது மனைவி சுப்ரியா, என்றென்றும் புன்னகை தயாரிப்பாளர் தமிழ்குமரன் போன்றோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.