ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் இணையும் புதிய படம்..!

‘சொல்லாமலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானவர் சசி. ‘ரோஜாக் கூட்டம்’ ‘பூ’ ‘டிஷ்யூம்’ ‘ஐந்து ஐந்து ஐந்து’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் ‘பூ’ படத்திற்கு சிறந்த இயக்குநர் விருதை பெற்றவர். இவர் கடைசியல் ‘பிச்சைக்காரன்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சசி இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சித்தார்த் நடிக்கிறார். ‘அபிஷேக் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சித்துக்குமார் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்துவருவதாக ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Response