சூப்பர் ஸ்டாருடன் நடித்தது எனக்கு கிடைத்த வரம் – ஆதி!

Aadhi1

இப்போது உள்ள இளம் தலைமுறை நடிகர்கள் இடையே பெரும் போட்டி, பொறாமை, சண்டை என அவ்வப்போது ஏதாவது செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு நடிகர்களும் நன்றாக பழகி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் நட்பின் அடிப்படையில் உதவுகிறார்கள். மற்றவரை பாராட்டவும் தயங்குவதில்லை.

இப்போது அந்த பட்டியலில் இணைபவர் ஈரம், அரவான் ஆகிய படங்களின் மூலம் பெயரும் புகழும் பெற்ற ஆதி. சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலும் தன்னுடைய சக போட்டியாளர்களை பாராட்டுவதில் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் இருக்கிறார். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அதர்வா, விக்ரம் பிரபு  என்ற தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்து பாராட்டி பேசும் ஆதி அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு எங்களது நேரம் வரும் போது  நல்ல கதைகள் கிட்டக் கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

இது என் தாய் எனக்கு கற்று தந்த பாடம். இவ்வுலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் சொல்லியே வளர்த்தார். அந்த பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மனநிலையில் நிதானமாக செயல்பட வைக்கிறது. இந்த மனநிலைக்கு அவரது  சகோதரர் சத்யா பிரபாஸ்  இயக்கத்தில் உருவாகும் ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தின் தலைப்பும் காரணமாக இருக்குமா என்றக் கேள்விக்கு ‘இருக்கலாம்’, இந்த படம் நிச்சயமாக  என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றார்.

கோச்சடையான்  படத்தின் சரித்திர கால வசனங்களுக்காக மெனக்கெட்டு பயிற்சி செய்து வரும் ஆதி, இந்த அனுபவம் தமிழ்மொழி மேல் தனக்கு உள்ள அபிமானத்தை கூட்டி இருப்பதாக கூறினார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது ஒரு வரம் என்று சொல்ல வேண்டும் என்றார்.

தற்போது பெருகி வரும் சின்ன பட்ஜெட்டில் நல்ல கதைகள் என்ற பாணியை தமிழில் அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் நடிப்பதை  பற்றி பேசும் ஆதி ‘சூப்பர் கதை’, 2013 வருடத்தின் பிற்பகுதி நிச்சயம் எனக்கு  பொற்காலமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.