விக்ரமன் படத்தை வாங்கிய லிங்குசாமி!

lingu

இயக்குனர் விக்ரமன் மரியாதை படத்துக்கு பின் புதுமுகங்களை வைத்து இயக்கி வரும் படம் நினைத்தது யாரோ. படம் முழுவதும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியானது.

நினைத்தது யாரோ படத்துக்கு விநியோகஸ்தர்கள் குறைந்த விலை பேசியுள்ள நிலையில் அந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் மூலமாக வெளியிட முன் வந்திருக்கிறார் லிங்குசாமி. இதற்கு ஒரேயொரு காரணம்தான். லிங்குசாமி இயக்குனர் விக்ரமனிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்திருக்கிறார். மொத்த உரிமையை வாங்கியுள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படத்தை ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.