வாஜ்பாய் குடும்பத்தினரை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி,..!

மறைந்த வாஜ்பாய் குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 16-ம் தேதி காலமானார்.

அவரது அஸ்தி இந்தியாவில் 100 நகரங்களில் கரைக்கப்பட்டது. வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக காவியாஞ்சலி என்ற தலைப்பில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்த பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை டில்லியில் உள்ள வாஜ்பாய் இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

 

Leave a Response