கூட்டணி குறித்து பேச இன்னும் கால அவகாசம் உள்ளது: தமிழிசை..!

தமிழகத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக-பாஜக கூட்டணி அமையக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச கால அவகாசம் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஏதேனும் பொது நிகழ்வுகளில் இரு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டால், அவர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்று முத்திரை குத்துவது தவறு. தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொள்ளப்போவதில்லை என்பது போன்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response